திமுக நிர்வாகி ரூ.50 லட்சம் மோசடி – உணவக உரிமையாளர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சீட்டுப் பணமான 50 லட்சம் ரூபாயை மோசடி செய்த திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீசி மோட்டூர் பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளரான விஜயன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியான எழில்வாணன் என்பவரிடம் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் என, 50 லட்சம் ரூபாய்க்கு சீட்டுப் பணம் செலுத்தி வந்துள்ளார்.

சீட்டு முடிந்து பிறகும் பணத்தை தராமல் இழுத்து அடித்த எழில்வாணன், 15 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு பாக்கி பணத்தை விரைவில் தந்துவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால், அதன் பிறகு விஜயனை, எழில்வாணன் சந்திக்க மறுத்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால், மனமுடைந்த விஜயன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த நிலையில், விஜயனின் மனைவி தேவி எழில்வாணனை சந்தித்து பணம் கேட்டதற்கு, விஜயன் யார் என்றே தெரியாது? என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேவி மற்றும் அவரது உறவினர்கள், சீட்டுப் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் வழங்கி, எழில்வாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version