இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு : ஐக்கிய தேசிய கட்சி தகவல்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சவுக்கு அந்நாட்டு அதிபர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து இலங்கையில் அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறியது. இறுதியாக உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியதை தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜபக்ச ராஜினாமா செய்தார். ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் அவர் தான் இலங்கையில் அடுத்த பிரதமராக பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் புதிய பிரதமராக ரணில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version