இலங்கை நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கான பெரும்பான்னையை பெற்றனர் ரணில் ஆதரவாளர்கள்

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவு உறுப்பினர்கள், நாடாளுமன்ற வழிநடத்துவதற்கான அதிகாரப்பூர்வ பெரும்பான்மை பெற்றனர்.

பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. இதில் அவையை வழிநடத்தும் சிறப்பு குழுவின் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 பிரதிநிதிகள் உட்பட 12 பேரை நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அமைக்க உத்தரவிட்டார்.

இதில் 7 பிரதிநிதிகளின் ஆதரவு இருப்பதால் ரணிலுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதற்கு அதிபர் சிறிசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து 12 பிரதிநிதிகள் நியமனத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அவையில் இருந்த 121 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் சிறப்புக் குழுவுக்கான பிரதிநிதிகள் நியமனம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக பிரதிநிதிகள் நியமனம் குறித்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டமும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version