ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை வெட்டி, விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை வெட்டி விட்டு, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமையன்று மீன்வளத்துறையின் அனுமதி பெற்று, சுமார் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 15-க்கும் மேற்பட்ட மீன்வர்களின் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினர் சென்ற பின் நீண்ட நேரம் கழித்து மீன்பிடிக்காமலேயே கரை திரும்பினர்.

இதனால், ஒவ்வொரு படகுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த அவர்கள்,

மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க வழிவகை செய்யவும், தங்களுக்கு உற்பத்தி விலையிலேயே டீசல் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version