ராமநாதசுவாமி கோவில் 4 ரதவீதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 4 ரதவீதி நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராமேஸ்வரம் கோயில் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் 4 ரத வீதிகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version