ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டத்தில் 80 லட்ச ரூபாய்க்கும் மேலாக வருவாய் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கோயில் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 80 லட்சத்து 80 ஆயிரத்து 365 ரூபாய் ரொக்கப் பணமும், 86 கிராம் தங்கம், 1 கிலோ 855 கிராம் வெள்ளி  மற்றும் 99 வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் தன்னார்வலர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Exit mobile version