தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்

தை அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பாடு நடத்தி வருகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் தை அமாவாசையையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

இதேபோல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் படித்துறை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடினர். அதிகாலையில் புனித நீராடிய அவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version