கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரைக்கு திரும்பினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததோடு, மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் நஷ்டத்துடன் கரைக்கு திரும்பினர்.

Exit mobile version