ராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு : ஆளுநர் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். பட்டணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் சுற்றுப்புற தூய்மை பணியை மேற்கொண்டு சுகாதார மேம்பாட்டு அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

மாவட்ட நிர்வாகம், தூய்மை பாரத இயக்கம் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அரங்கை ஆளுநர் திறந்து வைத்தார். தூய்மை பாரத இயக்கம் ரதத்தையும் மக்களின் பார்வைக்கு அவர் துவக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version