ராமநாதபுரத்தில் நீல நண்டு வளத்தை பாதுகாப்பது குறித்து ஆலோசனை

ராமநாதபுரத்தில் நீல நண்டு வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் நண்டு சதை பதனம் செய்யும் சங்கத்தின் சார்பாக நீல நண்டு வளத்தையும், அது சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாக் ஜலசந்தி கடல் பரப்பிலிருந்து பிடிக்கப்படும் நீல நண்டின் வளத்தை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், மீனவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Exit mobile version