சாகும்வரை சிறை: சிறுமியை வன்கொடுமை செய்த போலிச்சாமியாருக்கு அதிரடி தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கு; போலி சாமியாருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2019- ஆம் ஆண்டு பரிகாரம் செய்வதாக அழைத்து சென்று, இராமேஸ்வரத்தில் தங்கும் விடுதியில் வைத்து 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து என்ற போலி சாமியாருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version