கள்ளக்குறிச்சி அருகே பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்!

kallakurichi harassment

கள்ளக்குறிச்சி அருகே நில அபகரிப்பு, பாலியல் பலாத்கார முயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும்
நிலையில், அவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில், இவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் தம்பியின் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் நடவு செய்து பராமரித்து வந்த நிலையில், அந்த நிலத்தை திமுக கவுன்சிலர் இயேசு ரட்சகர் என்பவர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் வின்செண்ட் குடும்பத்தார் புகார் அளித்த நிலையில், இயேசு ரட்சகர் தனது அடியாட்களுடன் சென்று வின்சென்ட் மனைவி, 2 மகள்கள் மற்றும் தம்பி மனைவி ஆகியோரை அடித்து ஆடைகளை கிழித்து மானபங்கம் படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version