சேலம்..அரசு மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை..பேராசிரியர் கைது!

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 8 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்டவர், புகார்தாரர்களிடம் உதவி காவல் ஆணையர் தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை தலைவராக இருப்பவர் பேராசிரியர் ராஜேஷ். இவர் அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியைகள் மற்றும் உதவி பேராசிரியைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு காவல்துறை தலைவர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தனர். இது குறித்து விசாரிக்க சேலம் இரும்பாலை காவல் நிலைய உதவி ஆணையர் ஆனந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ராஜேஷ், அவருக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் உதவி ஆணையர் ஆனந்தி, தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்.

 

Exit mobile version