நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்!!!

தமிழகம் முழுவதும், நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என, தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார். புனித மாதமான ரமலானையொட்டி, இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ரமலான் பிறை எங்கும் தென்படவில்லை என்பதால், நாளை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று, தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

Exit mobile version