திமுகவினரின் முகம் சுளிக்க வைக்கும் பேரணி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், பேரணி என்ற பெயரில், திமுகவினர் டிராக்டரில் கரகாட்டம் நிகழ்ச்சி நடத்திய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுகவினர் பேரணி நடத்தினர். சாலையில் பாதுகாப்பான இடைவெளியின்றியும், முகக் கவசம் இன்றியும், டிராக்டரில் நடன நிகழ்ச்சியுடன் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சென்றது, அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மக்கள் பேருந்துகளை விட்டு இறங்கி சாலையில் குழந்தைகளுடன் நடந்து சென்றனர்.

Exit mobile version