மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா ரேஸ்

கோவை எட்டிமடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

மாபெரும் ரேக்ளா பந்தயத்தை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரேக்ளா மாடுகள் மற்றும் அதனை ஓட்டுபவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

200 மீட்டர், 300 மீட்டர் என 2 பிரிவுகளின் கீழ் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும், பரிசு தொகையும் வழப்பட உள்ளன.

Exit mobile version