திமுகவில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக செயல்படுவோம் – ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள்

ரஜினி மக்கள் மன்றத்திற்கு துரோகம் செய்துவிட்டு, திமுகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக செயல்படுவோம் என ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சூளுரைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மன்றத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த மதியழகன் கடந்த வாரம் திமுகவில் இணைந்திருப்பதாக சுட்டிக் காட்டினார். இந்தநிலையில் திமுக சார்பில் மதியழகன் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் பணியாற்றுவார்கள் என கூறினார்.

Exit mobile version