மத்திய பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தின் தெற்கு பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றார். முன்னதாக தனது பொறுப்பை ஏற்க வந்த அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்து அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற அவர், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். உள்நாட்டு பாதுகாப்பில் முழு கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version