பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ராஜ்நாத் சிங்

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடு திரும்பினார். பிரான்சிடம் இருந்து முதலாவது ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத் சிங் அதற்கு ஆயுத பூஜை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற அவர், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் மூன்று நாட்கள் பயணம் ஆக்கபூர்வமாக இருந்ததாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version