நாளை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாக். எதிராக முக்கிய முடிவு?

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த, டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானிற்கு எதிராக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Exit mobile version