தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத் சிங்

5-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் வாக்களித்து உள்ளனர். 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபடக் கூறினார்.

லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாக்கினை பதிவு செய்தார். மத்திய அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூரில் வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஹசாரிபாக் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Exit mobile version