தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது முப்படை தளபதிகளும் உடனிருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று பாஜக தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த ஆட்சிகாலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங்கிற்கு, தற்போது பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று அவர் முறைப்படி மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version