ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில்  நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் அவரது 28வது ஆண்டு நினைவு தினமான இன்று டெல்லி வீர் பூமியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ராஜீவ் காந்திக்கு அவரது நினைவு தினத்தில் மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version