ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகனின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரின் மனுவுக்கு பதிலளிக்க, சிறைத்துறை டிஐஜி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் ராபர்ட் பயஸ் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன், திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, சிறைத்துறை டிஐஜி-க்கு அவர் மனு அளித்த நிலையில், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டிஐஜி-க்கு உத்தரவிட வேண்டும் என ராபர்ட் பயஸ் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

Exit mobile version