பாஜக தேர்தல் அறிக்கைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது…

நதிகள் இணைப்புத் திட்டம் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டம் என்பதால், அதனை தற்போது பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். மக்கள் தங்கள் இருப்பதால், வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version