ரஜினிக்கு முதலில் தெளிவு பிறக்க வேண்டும் – சீமான் கருத்து

இலங்கையின் பிரதமராக ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், இந்தியாவின் அணுகுமுறை மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Metoo விவகாரத்தில் சாதாரண பெண்களுக்குப் பயனில்லை என்று கூறினார். இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் அணுகுமுறை தோல்வியடைந்து, சீனாவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை ரஜினி முதலில் சரி செய்யச் செல்லட்டும் என்றும், ரஜினிக்கு தெளிவு பிறக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version