ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விமர்சையாக கொண்டாட்டம்

கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவாதிரை அன்று, ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதற்கு கங்கைகொண்ட சோழபுரம் முடிகொண்டான் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டு நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version