ராஜஸ்தான்: பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு 100-ஆக அதிகரிப்பு

ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.

 

கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன. டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றன. இந்த நிலையில் குழந்தைளின் உயிரிழப்பு எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இது பற்றி ஆராய்வதற்காக, மருத்துவக் குழுவை மத்திய அரசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version