ராஜபாளையம்-சங்கரன்கோவில்-நெல்லை சாலை : காணொலி காட்சிமூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்

தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் – சங்கரன்கோவில் – நெல்லை சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் 2-ன் கீழ்  ராஜபாளையம் – சங்கரன்கோவில் – நெல்லை சாலை தரம் உயர்த்தப்பட்டது. சாலைப்பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, சாலையை சென்னையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  மனோகரன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

Exit mobile version