பெண்களை உல்லாசத்திற்கு அழைத்த காவலர்; ஊர் மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து உல்லாசத்துக்கு அழைத்த போலீசாரை, ஊர்மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

விருதுநகர் மாவட்டம் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் கபிலன்.

இவர் முதல் நிலை காவலராக பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் முதுகுடி பகுதிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆண்கள் இல்லாத பெண்களின் வீட்டின் கதவைதட்டி உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதில் கடும் ஆத்திரமடைந்த பெண்கள் கூச்சலிட்டு, ஊரை கூட்டியுள்ளனர். தங்களிடம் எப்படி தவறாக நடந்துகொள்ளலாம் என்று கேள்விகளால் காவலரை துளைத்துள்ளனர்.

இதையடுத்து காவலரை சுற்றி வளைத்த ஊர் மக்கள், அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஊர் மக்களிடம் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்துள்ளனர்.

பின் காவலரை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர்.

பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைராகி வருகிறது.

Exit mobile version