ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பரபரப்பான சூழலில் இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளநிலையில், பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த அந்நாட்டு அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்றத்தையும் கலைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு வரும் 19-ம் தேதி வரை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தவும் தடை விதித்தது.

இதையடுத்து நேற்று கூடிய இலங்கை நாடாளுமன்றத்தில், பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

இதனால் ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர், இன்று மீண்டும் கூடும் என்று அறிவித்தார். இதையடுத்து பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ள இலங்கை நாடாளுமன்றம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

Exit mobile version