சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு – அமைச்சர் ராஜலட்சுமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில், 3 வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும் என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.  சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் விலை இல்லா உணவு வழங்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி  இன்று அம்மா உணவகத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் அவர் உணவு வழங்கி உபசரித்தார். சித்த மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கபசுரக் குடிநீர் வழங்கும் பணியினைத் தொடங்கி வைத்த அமைச்சர் ராஜலெட்சுமி அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு ஒரு வார காலத்துக்கு தேவையான காய்கறிகளையும் விலை இல்லாமல் வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் அப்துல் மைதீன் காதர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version