ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து, மாதிரி கட்டடம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், போதிய மழை இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழக அரசு மழைநீர் சேகரிப்பது குறித்து பல்வேறு திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் குடியிருப்பு வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எவ்வாறு அமைப்பது என்பது குறித்த மாதிரி கட்டடத்தை அமைத்து, மழை நீரை, குழாய் மூலம், கூழாங்கற்களால் ஆன தொட்டியில் சேமிப்பதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு மழை நீரையும் வீணாகாமல் நாம் முழுமையாக பயன்படுத்த முடியும் என பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Exit mobile version