வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அந்த வகையில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அரை மணி நேரம் பெய்த மழையால் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நடவுப்பணிகளுக்கு இந்த மழை உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தினால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால், இதமான சூழ்நிலை நிலவுகிறது.

Exit mobile version