தெற்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அவ்வப்போது காற்றின் சுழற்சிக்கு ஏற்ப சில இடங்களில் திடீர் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வங்க கடலில் தென் மாவட்டங்களின் அருகே, காற்றழுத்த தாழ்வு நிலையும், மாலத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் தெற்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை 31% மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 4 சதவீதம் குறைவு என கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version