தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது, அதே நேரம் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version