தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழை நாளையோ அல்லது ஓரிரு நாட்கள் கடந்துதான் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version