வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில், நேற்று நள்ளிரவில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் 26ம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version