கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் !

கடலோர மாவட்டங்களில் அடுத்த சில தினங்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.

அதே வேளையில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version