காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்தது

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து 22 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம், 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 350 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், இதிலிருந்து 250 மெகாவாட் மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 16 கண் உபரிநீர் போக்கி வழியாக 12 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால், பாதுகாப்பைக் கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க 80ஆவது நாளாகவும், பரிசல் இயக்க 10ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version