மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவு – வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கேரளா,கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மலையோர மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக அதீத கன மழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதாகவும், நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு திசையில், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version