தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, புதுக்கோட்டை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு பருவத்தில் 15 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவை தமிழகம் பெற்றுள்ளது எனக் கூறிய புவியரசன், அதிவேக காற்று வீச வாய்ப்பிருப்பதால் குமரி கடல் பகுதி, தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மழை தொடர்வதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version