தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாம்பன்,நாகை மாவட்டங்களில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Exit mobile version