கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், அக்டோபர் 20ஆம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Exit mobile version