தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் காற்றின் மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்,அரியலூர் ஆகிய இடங்களில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கும்பகோணத்தில் 12 சென்டி மீட்டரும், அரூரில் 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version