தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனவும், தென் தமிழக பகுதிகளில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைய பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில் விட்டு, விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 40 முதல் 50 கி.மீ வேகத்தில் கடலில் காற்று வீசும் என்பதால் பாதுகாப்பு கருதி தென்கிழக்கு அரபிக் கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version