ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இங்குள்ள வத்திராயிருப்பு , கூமாபட்டி,மகாராஜாபுரம், மம்சாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக பெய்த கனமழையால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வந்த நிலையில், தற்போது இந்த பகுதிகளில் பெய்த கனமழையால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version