செங்கோட்டையில் திடீரென சூரைக் காற்றோடு பெய்த மழை

செங்கோட்டையில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் வாட்டியதையடுத்து, திடீரென சூரைக் காற்றோடு பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் ஆங்காங்கே மின்கம்பங்கள் சேதமடைந்தன. தனியார் கட்டிடத்தில் போடப்பட்டிருந்த தகர மேற்கூரை 40 அடி தூரம் பறந்து சென்று சாலையில் விழுந்தது. இதனையடுத்து, தகர கொட்டகைகளை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Exit mobile version