வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Exit mobile version