அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வெப்பநிலையை  பொறுத்தவரை திருத்தணியில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வேலூரில் 41.7 டிகிரி செல்சியசும், திருப்பத்தூரில் 42 டிகிரி செல்சியசும், மதுரையில் 40.8 டிகிரி செல்சியசும், பாளையங்கோட்டையில் 40 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணிநேரத்திற்கு 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை மேகமூட்டம் இருக்கும் என்றும், அதேசமயம் மழை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version